நீர் மோர்,கோடை காலங்களில் உடம்பை குளிர்விக்க அருந்தப்படும் ஒரு நல்ல பானமாகும்.மோரில் பச்சை மிளகாய்,இஞ்சி ,கறிவேப்பிலை ,ஜீரகம் சேர்த்து அடிப்பதால் அதன் சாறு இறங்கி நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.இதனை மசாலா மோர் என்றும் அழைப்பர்.இதனுடன் தாளிப்பு சேர்த்து 'ராம நவமி' அன்று கடவுளுக்கு பிரசாதமாக பானகத்துடன் படைப்பர்.நீர் மோர்,கேழ்வரகு கூழ்,கம்பு கூழ் என கிராமத்து வாசம் நகர்ப்புறங்களிலும் வீச தொடங்கியுள்ளது.மக்கள் பழமையை விரும்புவது பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் நல்லெண்ணமேயாகும்.
கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் மோர் ஆகியவற்றை மண்பானைகளில் வைத்து குடிப்பதால் இயற்கையான முறையில் உடல் குளிர்விக்கப்படுகிறது.
நீர் மோர் :
மோரில் - காரம்,தாளிப்பு சேர்த்து - அடிக்கவும்
மொத்த நேரம் : 5நிமிடம்
பரிமாறும் அளவு : 3பேர்
வீடியோ : நீர் மோர்
தேவையான பொருட்கள் :
தயிர் 1கப்
தண்ணீர் 3கப்
பச்சை மிளகாய் 1
இஞ்சி 1தேக்கரண்டி
கறிவேப்பிலை 5இலை
ஜீரகம் 1தேக்கரண்டி
உப்பு 1தேக்கரண்டி+
எண்ணெய் 1தேக்கரண்டி
கடுகு 1தேக்கரண்டி
பெருங்காயம் 3சிட்டிகை
கறிவேப்பிலை 5இலை
செய்முறை :
1.தயிர் மற்றும் தண்ணீரை நன்றாக கரண்டியின் உதவியுடன் கட்டி இல்லாமல் அடிக்கவும்.
2.நறுக்கிய பச்சை மிளகாய் ,இஞ்சி ,கறிவேப்பிலை,ஜீரகம் ஆகியவற்றை சிறிய உரல் அல்லது மிக்ஸியில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3.எண்ணெய் ,கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு அரைத்த விழுது ,தாளிப்பு ஆகியவற்றை மோருடன் சேர்த்து கலக்கவும்.
மண்பானையில் 2மணி நேரம் வைத்து பின் பரிமாறலாம் அல்லது ஐஸ் கட்டி சேர்த்து கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
No comments:
Post a Comment