சக்கரை பொங்கல் / Sweet Pongal பெரும்பாலும் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் ஒரு இனிப்பு பொங்கலாகும்.தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் அன்று கிராமப்புறங்களில், நெற்கதிர்கள் நல்முறையில் அறுவடை செய்யப்பட்ட ஆனந்தத்தை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக விவசாயிகள் கொண்டாடுகிறார்கள்.'மார்கழி' மாத இறுதி நாளிலிருந்து 'தை' மாதம் மூன்றாம் நாள் வரை மொத்தம் நான்கு நாட்கள் கிராமப்புறங்களில் திருவிழாக்கோலம்தான்.
போகிப் பொங்கல் (முதல் நாள் )
தைப் பொங்கல் (இரண்டாம் நாள்)
மாட்டுப் பொங்கல் (மூன்றாம் நாள்)
காணும் பொங்கல் (நான்காம் நாள்)
* போகிப் பொங்கலன்று மக்கள் பழையன கழித்து, வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்து புதியன புகுவார்கள்.
* தைப் பொங்கலன்று ,கண்ணுக்கு விருந்தாக சுண்ணாம்பு கோலமும் ,புத்தாடை உடுத்தியும் ,வீட்டிற்கு வெளியே மாவிலை தோரணமும் ,வாசலிற்கு இருபுறமும் வாழை மரம்,கரும்பு நட்டியும் ,வெண்கலப் பானையில்/மண்பானையில் பொங்கல் விடுவார்கள்.பொங்கற்ப்பானையின் வெளிப்புறத்திலும் கைவண்ணம் காட்டப்பட்டிருக்கும்,கழுத்தில் மஞ்சள் குழையுடன்.பொங்கற்பானையிலிருந்து பொங்கிவரும் பொங்கல் ,அக்கணத்தில் பெண்கள் எழுப்பும் ஆனந்த கூவல் குலமகளுக்கே சொந்தமாகும்.
* மாட்டுப்பொங்கலன்று ஏர் உழுத மாட்டிற்கு நன்றி சொல்லும் விதமாக குளிப்பாட்டி ,கொம்பிற்கு வண்ணமிட்டு ,கழுத்தில் மணி அணிவித்து , சந்தனத்தை குழைத்து ,குங்குமம் சேர்த்து நெற்றியில் திலகமிட்டு கொண்டாடப்படும்.
* காணும் பொங்கலன்று சிறந்த அறுவடைக்காக உதவிய உற்றார் ,உறவினர் அனைவரையும் சந்திக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக அனைத்து கிராமங்களிலும் பொங்கல் போட்டிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.இந்த தலைமுறையில் நகர்புறத்தில் வசிப்பதாலும் ,சுலபமான முறைக்காகவும் குக்கர் பொங்கல் செய்கிறோம்.
சக்கரை பொங்கலன்று புதிதாக அறுவடை செய்த பச்சரிசி உபயோகித்து,சிறுபருப்பு ,சுவையூட்ட வெல்லம்,தேங்காய்,ஏலக்காய் சேர்த்து பொங்கல் செய்யப்படுகிறது.நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்க்கப்படும்.சக்கரை பொங்கல்,வெள்ளை பொங்கல் என இரு பொங்கல் தனித்தனி பானைகள் வைத்து பொங்கல் விடப்படும்.வெள்ளை பொங்கல் வெல்லம் ,பழம் ,நெய் சேர்த்து பரிமாறப்படும்.
தை மாதம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கள் ,கிழங்கு வகைகள் அனைத்தையும் ஒற்றைப்படை எண்ணில் சேர்த்து பொங்கல் கூட்டு குழம்பு செய்வார்கள்.
என் கிராம பொங்கல் கொண்டாட்டத்தை எழுத்து வடிவில் சமர்பித்ததால் பெருமையடைகிறேன்.
தை மாதம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கள் ,கிழங்கு வகைகள் அனைத்தையும் ஒற்றைப்படை எண்ணில் சேர்த்து பொங்கல் கூட்டு குழம்பு செய்வார்கள்.
என் கிராம பொங்கல் கொண்டாட்டத்தை எழுத்து வடிவில் சமர்பித்ததால் பெருமையடைகிறேன்.
பொங்கல் திருநாள் அன்று செய்யப்படும் சிலவகையான சமையல் .
* சக்கரை பொங்கல்
வீடியோ : குக்கர் சக்கரை பொங்கல்
* வெண் பொங்கல்
* தேங்காய் சட்னி
* இட்லி சாம்பார்
* பருப்பு வடை
* மெது /உளுந்து வடை
* ஏழு காய்கறி சாம்பார் / பொங்கல் கூட்டு குழம்பு [அறுவடை செய்யப்பட்ட அனைத்து காய்கள்,கிழங்குகள் சேர்த்து செய்யப்படும் சாம்பார் இது]
லஞ்ச் சாம்பார்
* அவியல் , பொரியல்
சிறுகிழங்கு பொரியல்
அவரைக்காய் பொரியல்
வாழைக்காய் பொரியல்
பீட்ரூட் பொரியல்
சேனை கிழங்கு மசியல்
* பாயசம்
அரிசி-தேங்காய் பாயசம் (வீடியோ )
சேமியா பாயசம்
அவல் பாயசம்
ஜவ்வரிசி பாயசம்
* கேசரி
பைன் ஆப்பிள் கேசரி
கோதுமை கேசரி (வீடியோ)
பூஜை அறை சிறிய கோலம்
No comments:
Post a Comment