வறுத்தரைத்த கோழிக்கறி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மசாலா வகையாகும்.இதனை இட்லி,தோசை ,சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் சேர்த்து பரிமாறலாம்.சிக்கன் ப்ரோட்டீன் நிறைந்த உணவென்பதால் குழந்தைகளுக்கு நல்லது."அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மனதில் வைத்து ருசிக்கவும்.அமிர்தத்தையும் பரிசோதித்து சாப்பிடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.வீட்டிலேயே மசாலா தயாரித்து சமைப்பதால் நல்ல மணத்துடனும் ,சுவை மிகுந்தும் இருக்கும்.நாவில் எச்சில் ஊற பதிவை எழுதுகிறேன்.
உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கோடை காலங்களில் பெரும்பாலும் சிக்கன் உண்பதை தவிர்க்கவும் அல்லது சாப்பிட்டபின் எலுமிச்சை பானம் / மோர் அருந்தலாம்.
வறுத்தரைத்த கோழிக்கறி :
மசாலா தயாரித்து - கறியை சேர்த்து வேகவைக்கவும்
கோழிக்கறி சுத்தம் செய்ய : 10நிமிடம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 40நிமிடம்
பரிமாறும் அளவு : 3பேர்
தேவையான பொருட்கள் :
எண்ணெய் 2மேஜைக்கரண்டி
கடுகு 1தேக்கரண்டி
கறிவேப்பிலை 1தழை
பச்சை மிளகாய் 1/2
பெரிய வெங்காயம் 1
பெரிய தக்காளி 1
மஞ்சள் தூள் 1/4தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4தேக்கரண்டி
இஞ்சி -பூண்டு விழுது 1மேஜைக்கரண்டி
புதினா இலை 1கையளவு
கோழிக்கறி / சிக்கன் 1கிலோ
தண்ணீர் 4கப் +
தண்ணீர் 4கப் +
கொத்தமல்லி தழை 1கையளவு
உப்பு தேவையான அளவு
மசாலா தயாரிக்க :
எண்ணெய் 1தேக்கரண்டி
கிராம்பு 3
பட்டை 1"
ஏலக்காய் 1
கொத்தமல்லி விதை 2மேஜைக்கரண்டி
சோம்பு 1மேஜைக்கரண்டி
ஜீரகம் 1தேக்கரண்டி
மிளகு 1தேக்கரண்டி
முந்திரிபருப்பு 4
கறிவேப்பிலை 6இலை
வற்றல் / காய்ந்த மிளகாய் 6சிறியது / 4 பெரியது
பூண்டு 4பல்
சின்ன வெங்காயம் 6
தேங்காய் 1/2கப்
செய்முறை :
# முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது உப்பு சேர்த்து 5முறை அலசி சுத்தம் செய்யவும்.
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.
1.ஒரு அடிகனமான கடாயில் 1தேக்கரண்டி எண்ணெய் விட்டு மசாலா தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் 3-4நிமிடம் வரை வதக்கவும்.பின்னர் சிறிது ஆறவைத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
2.அடிகனமான பெரிய கடாயில் எண்ணெய் சேர்த்து ,சூடானதும் கடுகு சேர்க்கவும்.கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து 2-3நிமிடம் வதக்கவும்.நறுக்கிய தக்காளி ,இஞ்சி-பூண்டு விழுது,புதினா இலை சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
3.சிக்கனை சேர்த்து 3நிமிடம் வதக்கவும்,இப்பொழுது சிக்கன் நீர்விட்டு காணப்படும்.அரைத்த மசாலா,4கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10-15 நிமிடம் வரை மூடிவிட்டு வேக விடவும்.2நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான வறுத்தரைத்த கோழிக்கறி ரெடி !!!

இட்லி.தோசை,சப்பாத்தி,சாதம் ஆகியவற்றுடன் .பரிமாறலாம்,
குறிப்புக்கள் :
1.கெடாமலிருக்க எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சூடேற்றவும்.
2.பரிமாறும்போது மட்டும் வேறு பாத்திரத்திற்கு தேவைக்கேற்ப எடுக்கவும், சமைத்த பாத்திரத்தில் வைத்தே காலியாகும்வரை சூடேற்றி சாப்பிடவும்[சமைத்த நாளைவிட அடுத்த நாள் சுவை மிகுந்து காணப்படும்].
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.